Pages

Thursday 20 July 2023

மருத்துவ சேவைக் குறைபாடு வழக்கு

 நான் ஆலோசனை கூறிய ஒரு வழக்கு.

.
காலையில் 11 மணிக்கு மருத்துவமனைக்கு கருக்கலைப்பிற்காக ஒரு பெண் செல்லுகின்றார். மதியம் 4 மணி அளவில் அவருக்கு உடல்நலம் குன்றி, அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு இறந்துவிடுகின்றார். கருக்கலைப்பு செய்ததனால் ஏற்பட்ட கவனக்குறைவால் அந்த பெண் இறந்தாகத்தான் மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு. ஆனால், அந்த பெண்ணிற்கு நடந்த உடற்கூராய்வில், கரு கலைப்பு நடைபெறவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்யப்படுகின்றது. என்ன வகையில் புகார் சொல்லப்பட்டதோ, அந்த புகாரின் அடித்தளமே நொருங்கிவிட்டது. இனி இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வாதாட ஒன்றுமே இல்லை என்ற நிலையிலும், Reserved for Judgment என்ற நிலையில், நான் அமெரிக்காவில் இருக்கும்போது எனது ஆலோசனைக்கு, வருகின்றது. Summary proceedings என்று வழக்கினை re-open செய்ய மறுக்கப்பட்ட நிலையில், மாண்பமை தேசிய நுகர்வோர் ஆணையத்தின் ஆணையை சுட்டிக்காட்டி அந்த வழக்கு re-open செய்யப்பட்டு மருத்துவர் குறுக்கு விசாரணை செய்யப்பட்டு, கூடுதல் எழுத்துமூல வாதுரை தாக்கல் செய்யப்பட்டு, அதன்அடிப்படையில் நுகர்வோர் குறைதீர் ஆணையமானது மருத்துவ சேவை குறைபாடு என்று ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க ஆணையிட்டது. இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் தரப்பில் காலையில் நோயாளி மருத்துவமனைக்கு வரும்போதே, நல்ல நிலையில் இருந்தார் என்று அவர்களது எதிர்உரையில் ஒப்புக்கொண்டுள்ளார்கள். ஆகையால், நல்ல நிலையில் இருந்த நோயாளியின் உடல்நிலை மோசமான நிலைக்கு சென்றதற்கான காரணத்தையும் மற்றும் இறப்பிற்கான காரணத்தையம் மருத்துவரே Res ipsa loquitur என்ற முதுமொழியின் அடிப்படையில் நிருபிக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தே இந்த வழக்கில் வெற்றிபெற முடிந்தது. மருத்துவ சேவைக்குறைபாடு வழக்குகளை எதிர்கொள்ள வேண்டுமென்றால், அது சார்ந்த அதிக அளவிலான ஆணைகளை படிக்க வேண்டும். எதெல்லாம் மருத்துவ சேவை குறைபாட்டில் வரும் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment