Pages

Showing posts with label Medical. Show all posts
Showing posts with label Medical. Show all posts

Thursday, 20 July 2023

மருத்துவ சேவைக் குறைபாடு வழக்கு

 நான் ஆலோசனை கூறிய ஒரு வழக்கு.

.
காலையில் 11 மணிக்கு மருத்துவமனைக்கு கருக்கலைப்பிற்காக ஒரு பெண் செல்லுகின்றார். மதியம் 4 மணி அளவில் அவருக்கு உடல்நலம் குன்றி, அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு இறந்துவிடுகின்றார். கருக்கலைப்பு செய்ததனால் ஏற்பட்ட கவனக்குறைவால் அந்த பெண் இறந்தாகத்தான் மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு. ஆனால், அந்த பெண்ணிற்கு நடந்த உடற்கூராய்வில், கரு கலைப்பு நடைபெறவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்யப்படுகின்றது. என்ன வகையில் புகார் சொல்லப்பட்டதோ, அந்த புகாரின் அடித்தளமே நொருங்கிவிட்டது. இனி இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வாதாட ஒன்றுமே இல்லை என்ற நிலையிலும், Reserved for Judgment என்ற நிலையில், நான் அமெரிக்காவில் இருக்கும்போது எனது ஆலோசனைக்கு, வருகின்றது. Summary proceedings என்று வழக்கினை re-open செய்ய மறுக்கப்பட்ட நிலையில், மாண்பமை தேசிய நுகர்வோர் ஆணையத்தின் ஆணையை சுட்டிக்காட்டி அந்த வழக்கு re-open செய்யப்பட்டு மருத்துவர் குறுக்கு விசாரணை செய்யப்பட்டு, கூடுதல் எழுத்துமூல வாதுரை தாக்கல் செய்யப்பட்டு, அதன்அடிப்படையில் நுகர்வோர் குறைதீர் ஆணையமானது மருத்துவ சேவை குறைபாடு என்று ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க ஆணையிட்டது. இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் தரப்பில் காலையில் நோயாளி மருத்துவமனைக்கு வரும்போதே, நல்ல நிலையில் இருந்தார் என்று அவர்களது எதிர்உரையில் ஒப்புக்கொண்டுள்ளார்கள். ஆகையால், நல்ல நிலையில் இருந்த நோயாளியின் உடல்நிலை மோசமான நிலைக்கு சென்றதற்கான காரணத்தையும் மற்றும் இறப்பிற்கான காரணத்தையம் மருத்துவரே Res ipsa loquitur என்ற முதுமொழியின் அடிப்படையில் நிருபிக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தே இந்த வழக்கில் வெற்றிபெற முடிந்தது. மருத்துவ சேவைக்குறைபாடு வழக்குகளை எதிர்கொள்ள வேண்டுமென்றால், அது சார்ந்த அதிக அளவிலான ஆணைகளை படிக்க வேண்டும். எதெல்லாம் மருத்துவ சேவை குறைபாட்டில் வரும் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவ சேவைக் குறைபாடு என்பது நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையங்களின் வரம்பிற்குள் வருவது சரியா?

மருத்துவ சேவைக் குறைபாடு என்பது நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையங்களின் வரம்பிற்குள் வருவது சரியா?

.
ஒவ்வொரு துறையில் பணிபுரிபவர்களிடம், அந்தத் துறைச்சார்ந்த பொறுப்புடைமை இருக்க வேண்டும். அவ்வாறான பொறுப்புடைமை ஏற்படுத்ததான் அரசாங்கம் பல சட்டங்களை இயற்றி வருகின்றது. உதாரணமாக அரசு அலுவலர்களிடையே பொறுப்புடைமையை ஏற்படுத்துவதற்காகத்தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. (இந்தச் சட்டமானது தகவல் பெறுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட சட்டமாக பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்). ஒரு தொழிலில் ஈடுபடுவர்கள் பொறுப்புடைமையுடன் செயல்படவில்லை என்றால், உரிய அதிகார அமைப்புடன் முறையீட்டு அவர்களைப் பொறுப்புடைமையுடன் செயல்பட வைப்பது என்பது அவசியம் இல்லையெனில் அந்த தொழில் மாண்பமை குறைந்துவிடும். அதற்காக, ஒரு இலகுவான சட்டமும் அவசியம். அவ்வாறு எந்தத் தொழிலும் உள்ள சேவைக் குறைபாடுகளைக் களைய உருவாக்கப்பட்ட சட்டம்தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமாகும்.
.
வழக்கறிஞரால் பாதிப்பு அடைந்த ஒருவர், சுயவழக்காடியாகச் சட்டங்களையும் நீதிமன்ற நடைமுறைகளையும் தெரிந்து கொண்டு அவரது வழக்கைத் தொடரலாம். ஆனால், மருத்துவத் துறையில் அது சாத்தியமா? ஒருவருக்கு உடல்ரீதியான மருத்துவ பிரச்சனை என்றால், அவர் கட்டாயம் மருத்துவரை அணுகி மட்டுமே தீர்வு காண முடியும் என்பதால், மருத்துவர்களின் தொழிலில் அதிகப்பட்சப் பொறுப்புடைமை என்பது அவசியமாகின்றது. அந்தப் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்காக பொது மக்களின் கைவசம் உள்ள சட்டம்தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமாகும். நமது நாட்டில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கையோடு, அவர்கள் மீதான வழக்குகளை எடுத்துக் கொண்டால், அது மிக குறைவான எண்ணிக்கையிலானது. அதற்கு முக்கிய காரணம் இன்றும், மக்கள் மருத்துவரை தெய்வமாக நினைப்பதும், மருத்துவர் வேண்டுமென்றே தப்பு செய்திருக்க மாட்டார் என்ற மக்களின் அதீத நம்பிக்கையாகும். “மருத்துவர் வேண்டுமென்றே தப்பு செய்திருக்க மாட்டார்“ எனும் நம்பிக்கைச் சில நேரங்களில் சில மருத்துவர்களால் தகர்க்கப்படும்போது, குறிப்பாக Gross Negligence என்ற வகையான மருத்துவ சேவை குறைபாடுகளில், (நோயாளி இறக்கும்போது) வேறு வழியின்றி பொது மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்ததை நாட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.
.
Somraj Sen & Anr. Vs. Kothari Medical Centre & 7 Ors (2023) என்ற வழக்கில் மருத்துவர் ஒருவருக்கு ‘D & C’ laparoscopic procedure செய்யும்போது மாரடைப்பு வந்து இறந்துவிடுகின்றார். இதில் மருத்துவர்கள் அளித்த சேவையில் எந்தவிதக் குறைபாடு இல்லை எனவும், ஆனால் மருத்துவமனை சேவைக் குறைபாடுடன் செயல்பட்டதாக 1.25 கோடி இழப்பீடு வழங்க மத்திய நுகர்வோர் ஆணையம் ஆணையிட்டுள்ளது. இங்கு ஒரு விடயத்தைக் கவனிக்கவும், இறந்தவர் மருத்துவர் என்பதனால், அவரது குடும்பத்தார், மருத்துவர் மீதோ அல்லது மருத்துவமனையின்மீதோ வழக்காடமல் இருந்தார்களா? மருத்துவ சேவைக் குறைபாடு இருந்ததாகப் புகார் செய்து, மருத்துவரின் குடும்பமே நிவாணம் பெற முடிந்த நிலையில், ஒரு சாமானியன் மருத்துவ சேவைக் குறைபாட்டினை எதிர்கொள்ளும்போது, நுகர்வோர்க் குறைதீர் ஆணையங்களை அணுகும் வகையில் மருத்துவ சேவைக் குறைபாட்டினை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் வரம்பிற்குள் வைத்திருப்பது என்பது சரிதானே?
.
மருத்துவரோ அல்லது அவரது குடும்பத்தாரே மருத்துவ சேவைக் குறைபாடு என்று புகாரினை சமர்ப்பித்தால், அவர்கள் வழக்கில் பெரும்பாலும் வெற்றியடைகின்றார்கள். அதற்குக் காரணம், மருத்துவத்துறையை பற்றிய புரிதல் அவர்களுக்கு உள்ளது. மேலும், வழக்கிற்குத் தேவையான விபரங்களை மருத்துவத்துறையில் உள்ளவர்களே அவர்களுக்கு எடுத்துக்கொடுத்து உதவுவார்கள். ஆனால், மருத்துவ சேவைக் குறைபாட்டிற்காக நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையங்களை அணுகும் பொதுமக்கள் பலருக்கு மருத்துவத்துறையினை பற்றிய புரிதல் இல்லாமையால் பல நேரங்களில் வழக்கில் வெற்றிப் பெற முடிவதில்லை.
.
தேசிய நுகர்வோர் ஆணையத்தின் மருத்துவ சேவைக் குறைபாடு ஆணைகள் பெரும்பாலும் வடமாநிலத்தை சார்ந்ததாகும். அங்கு, பொது மக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும், மருத்துவ சேவைக் குறைபாடு வழக்குகளில் அதிக அளவில் புரிதல் உள்ளது அதற்கு இணையாக மருத்துவ சேவை குறைபாடுகளை தவிர்க்கும் வகையில் மருத்துவர்களுக்கும் அதிக அளவில் புரிதல் உள்ளது. மருத்துவ சேவைக் குறைபாடுகளை தவிர்க்கும் வகையில் பொறுப்புடமையுடன் செயல்பட மருத்துவர்கள் முன் வரவேண்டும் அதற்காக Medical Negligence Cases-களில் அதிக அளவிலான கலந்துரையாடல்களை நடத்த வேண்டும். அதில் மருத்துவர்கள் கலந்து கொண்டு, என்ன வகையான விடயங்கள் மருத்துவ சேவை குறைபாடுகளில் வருகின்றது என்பதை அறிந்து, அவற்றைத் தவிர்த்து பொறுப்புடமையுடன் செயல்பட முன் வரவேண்டும்.
.
இன்று பல மருத்துவமனைகளில், மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், அறுவைச் சிகிச்சைகளுக்கு முன்னர்க் குறைந்தபட்ட informed consent-கூட பெறுவதில்லை. அதுவே, மருத்துவர்களுக்கு எதிராகச் சேவை குறைபாடாகவும் மற்றும் Unfair trade practice-ஆக அமைகின்றது.
.
ஆகவே, நுகர்வோர்ப் பாதுகாப்பு சட்டத்தின் வரம்பிற்குள் மருத்துவ சேவைக் குறைபாடு இருக்கும் வரை, மருத்துவ சேவைக் குறைபாட்டினை தவிர்க்கும் விதமாக அனைத்து நடவடிக்கைகளையும் மருத்துவர்கள் எடுத்து, பொறுப்புடைமையுடன் செயல்படுவது அவசியமாகும்.

Wednesday, 28 June 2023

கல்லீரலில் கொழுப்பு படிவதற்கு உரிய சிகிச்சை தேவை

 பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளுக்கு Non Alcoholic Fatty Liver Disease (NAFLD) (கல்லீரலில் கொழுப்பு படிவது) என்ற நிலை இருக்கும். இடையில், இந்த நோய் எந்தவித தாக்கத்தையும் காண்பிக்காமல் சில வருடங்கள் கழித்து அனைத்து பிரச்சனைகளையும் காண்பித்து, கல்லீரல் முற்றிலுமாக செயல் இழந்து, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு கொண்டு செல்லும். ஆகவே, கல்லீரலின் நிலையை ஆரம்பித்திலேயே Fibro scan கொண்டு கண்காணித்து உரிய life style changes செய்து கொள்வது இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும். இந்த மருத்துவ பிரச்சனைக்கான சிறப்பு மருத்துவரான திருமதி. மரு.V.S.ஹேமமாலா MD DM (Gastroenterologist) என்பவர் சென்னையில் Hepatologist ஆக பணிபுரிகின்றார். இவர் அமெரிக்காவில் கல்லீரல் சம்பந்தமாக Fellowship படித்திருக்கின்றார். நோயாளியின் அனைத்து சந்தேகங்களுக்கும் பொறுமையாக பதில் அளிக்கின்றார். நீரிழிவு நோயாளிகள், குறிப்பாக fatty liver இருப்பவர்கள், அல்லது அதிக மதுப்பழக்கம் உள்ளவர்கள் இவரையே அல்லது இவர் போன்று கல்லீரல் சம்பந்தமாக சிறப்பு மருத்துவ பட்டம் படித்தவர்களையோ சந்தித்து, தங்களது கல்லீரலின் நிலையை பரிசோதித்து கொள்வது நல்லதாகும். (இவரது கணவர் திரு.இளங்கோ சேது - கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்வதில் திறமையானவர். )

இரத்த பரிசோதனைக்காக லேப்களுக்குச் சென்றால்..... .

 

இரத்த பரிசோதனைச் செய்யும் லேப்களுக்குச் சென்றால், ஒருவருக்கு இரத்தம் எடுக்கும் முன், ஒரு பஞ்சில் ஸ்பிரிட் எடுத்து, இரத்தம் எடுக்கப் போகும் தோல் பகுதியில் துடைப்பார்கள். பின்னர் அந்த இரத்த குழாய் தெரிவதற்காகக் கையுறை அணியாத அவர்களின் விரலால் அந்த இடத்தை அழுத்துவர்கள் (கவனிக்கவும்முதலில் ஸ்பிரிட் வைத்து துடைத்த இடத்தை அவர்கள் விரலால் அழுத்துவார்கள். இப்போது ஏற்கனவே ஸ்பிரிட்டால் துடைத்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்) அப்போது அவர்கள் விரல்களில் ஏதாகிலும் கிருமிகள் இருந்தால், இரத்தம் எடுக்க ஊசியால் குத்தபோகும் தோலில் அமர்ந்துவிடும். அந்த இடத்தில் இரத்தம் எடுப்பதற்கான ஊசியைக் குத்தும்போது, தோலில் உள்ள கிருமிகள் இரத்த குழாய்களுக்குச் செல்ல வாய்ப்புண்டு.  ஒருவருக்கு இரத்தம் எடுத்து முடித்தவுடன், இரத்த கசிவினைத் தடுக்க ஊசியால் துளையிட்ட  இடத்தில் பிளாஸ்டர் ஒட்டுவார்கள். அவ்வாறு பிளாஸ்டர் ஒட்டும்போது, ஊசியால் துளையிட்டதால் கசிந்த  இரத்தமானது இரத்தம் எடுப்பவரின் விரல்களில், ஒட்டுவதற்கு வாய்ப்பு உண்டு. பின்னர்க் கையுறை அணியாத அதே  விரல்களால், மற்றவருக்கு இரத்தம் எடுக்கும்முன் இரத்த குழாய் தெரிவதற்காக அழுத்துவார்கள். இப்போது அவர்கள் விரல்களில் உள்ள இரத்த கறையானது இரத்தம் எடுக்கப் போகும் மற்ற நபரின் தோலில் அமர்ந்து, அந்த இடத்தில் ஊசி குத்தும்போது, தோலில் அமர்ந்துள்ள இரத்த கறையில் உள்ள கிருமிகள் இரத்தம் எடுக்கும் நபரின் இரத்த குழாய்களுக்கு செல்ல வாய்ப்புண்டு.  இதைத் தடுப்பதற்கு என்னதான் தீர்வு? இரத்த மாதிரி எடுப்பதற்கு முன்னால், இரத்தம் எடுப்பவர்கள் ஒவ்வொருவரும்,  ஒவ்வொருவருக்காகவும் தனித்தனியாகக் கையுறை அணிய வேண்டும்.

.

ஒரு பிரபலமான லேப்பில் யுரின் சாம்பிள் எடுக்கும் பாட்டிலுக்கும் ரூ.10 தனியாகக் கட்டணம் போடுவார்கள். லேப் சார்ஜ் ரூ.1500 மேல் கட்டணம் வந்தாலும் அங்கிருப்பவர்கள் ரூ.5 விலையுள்ள கையுறையை அணியமாட்டார்கள். அடுத்த தடவை நீங்கள் இரத்த பரிசோதனைக்கு லேப்பிற்குச் சென்றால், இரத்தம் எடுக்கும் முன் அவர்களை கையுறை அணிய நிர்பந்தப்படுத்துங்கள். (கையுறை தயாராக வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு சோம்பறித்தனம் அதை அணிவதில்). கையுறை அணிய மறுத்தால், அங்கு பரிசோதனைச் செய்வது என்பது உங்களுக்கு உடலநலத்திற்குப் பெரிய அளவிலான ஆபத்தாக முடியலாம். இவர்கள் எல்லோரையும் கண்காணிக்கும் அதிகாரம் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநருக்கு உள்ளதால், இந்த தவற்றினை அவர்களின் பார்வைக்கு நடவடிக்கை எடுக்க, கொண்டு செல்லுங்கள். மேலும் இவ்வாறு கையுறை அணியாமல் ஒருவருக்கு பரிசோதனைக்காக  இரத்தம் எடுப்பது சேவை குறைபாடாக அமையும். இந்தப் பதிவு இரத்தம் பரிசோதனை செய்யும் லேப்பிற்கு மட்டுமல்ல, இரத்த பரிசோதனைச் செய்யப்படும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொருந்தும். இது ஒரு விழிப்புணர்வு பதிவு. உங்கள் நண்பர்களின் பார்வைக்கும் இந்த பதிவினை கொண்டு செல்லுங்கள்.

 

Sunday, 20 October 2019

அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை ஏன் தாமதம் ஆகின்றது?


Shiva Ramakrishnan என்பவரின் முகநுால் பதிவு. அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். 

அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு சென்றால் சில நேரங்களில் தாமதம் ஆவது ஏன் என்ற கேள்விக்கு விடையறிய அங்கு நடைபெறும் நடைமுறைகளை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.
.
அறுவை சிகிச்சைக்காக ஒரு நோயாளி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணரை (பொது அறுவை சிகிச்சை நிபுணர், எழும்பு முறிவு அறுவைச சிகிச்சை நிபுணர் மற்றும் இதர அறுவை சிகிச்சை நிபுணர்) பார்க்கும்போது, அவர் அந்த நோயாளியை பரிசோதித்து அவருக்கு அறுவை சிகிச்சை தேவையா என்பதை முதலில் தீர்மானிப்பார். நோயாளியிடம் எந்தவகையிலான அறுவை சிகிச்சை செய்யப்படும் என்பதை எடுத்து கூறுவார். பின்னர் அறுவை சிகிச்சை தேவைப்படும் அனைத்து உடல் நல பரிசோதனைகளும் செய்வார். உதாரணமாக நோயாளியின் இரத்த கொதிப்பு / இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பார், நோயாளி நீரிழிவு நோயால் மற்ற இதர நோயால் பாதிக்கப்பட்டுள்ளரா என்பதை கேட்டறிவார். பின்னர் அவருக்கு நீரழிவு நோய், நெஞ்சக மற்றும் இதர நோய்கள் இல்லை என்பதை உறுதி செய்ய இரத்த, சிறுநீர், எக்ரே பரிசோதனைகளுக்கு அனுப்புவார்.
.
நோயாளியின் அனைத்து லேப் பரிசோதனைகளையும் அறுவை சிகிச்சை நிபுணர் சரிபார்த்து, அவருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாத பட்சத்தில், அறுவை சிகிச்சைக்கு மயக்கம் கொடுக்கும் வகையில், நடைபெற இருக்கும் அறுவை சிகிச்சை முறையை பற்றி விரிவாக எழுதி, நோயாளியின் அனைத்து ரிப்போர்ட்களையும் வைத்து அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுப்பதற்கு ஏற்ற வகையில் அவரது உடல் நலம் உள்ளதா என்பதை அறிய மயக்கவியல் மருத்துவரிடம் அனுப்புவார்.
மயக்கவியல் மருத்துவர் நோயாளியின் அறுவை சிகிச்சை தன்மைக்கு ஏற்ப மயக்கவியல் மருந்து செலுத்துவதற்கான உடல்நிலையில் நோயாளி உள்ளாரா என்பதை பரிசோதித்து, அவர் தகுதியானவர்தான் என்றால் நோயாளியனாவர் அறுவை சிகிச்சைக்கு தயார் என்ற அறிக்கையை கொடுப்பார். அதன் பின்னர் அந்த நோயாளிக்கு குறிப்பிட்ட நாளில் அறுவை சிகிச்சை நிபுணர் அறுவை சிகிச்சை மேற்கொள்வார். மேலே சொல்லப்பட்டதுதான் உடலில் எந்தவித பிரச்சனையும் இல்லாத நோயாளிக்கு, அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னர் அரசு மருத்துவமனையில் நடைபெறும் நடைமுறையாகும். நல்ல உடல்நிலையில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சை நடைபெறுவது தாமதம் ஆவது கிடையாது.
.
சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்ய தாமாதம் ஆவதற்கான காரணத்தை பார்ப்போம். அறுவை சிகிச்சை நிபுணர் முதலில் நோயாளியை பரிசோதித்தபோது அவருக்கு அதிக இரத்த அழுத்தம் இருந்தாலோ, அல்லது நீரழிவு மற்றும் இதர நோய்கள் இருந்தாலோ அந்த நோயாளியை அந்த பிரச்சனைகளை கட்டுபடுத்தும் வகையில் அதற்கான சிறப்பு மருத்துவர் ஒருவரிடம் அனுப்பி வைப்பார். அதன்படி இரத்த அழுத்தம் உள்ளவரை, பொது மருத்துவரானவர் அதற்கான மருந்துகளை சாப்பிட்டு, ஒரு குறிப்பிட்ட கால அளவிறகு திரும்பவும் அவரை பார்க்க வரச்சொல்லுவார். அந்த கால அளவிற்குள் இரத்த அழுத்தம் குறைந்து இருந்தால், அவர் அதை குறிப்பிட்டு அறுவை சிகிச்சை நிபுணரிடம் அந்த நோயாளியை திரும்பவும் அனுப்பி வைப்பார். நோயளிக்கு நீரிழிவு நோய் இருந்தாலும் இந்த முறைதான் கடைபிடிக்கப்படும். இவ்வாறு நோயாளியின் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும் வரை அவரை தகுந்த சிறப்பு மருத்துவரிடம் பரிந்துரை செய்வது என்பது அறுவை சிகிச்சை நிபுணரின் பணியாகும். இதுபோன்ற தாமதங்கள் தவிர்க்க முடியாதை.
.
நோயாளிக்கு எந்தவித உடல்நல பிரச்சனையும் இல்லை என்ற நிலையில்தான், அதாவது இனிஷயில் ஸ்கிரினிங் என்பார்கள் அவை அனைத்தையும் செய்து முடித்துதான் அறுவை சிகிச்சை நிபுணர் மயக்கவியல் மருத்துவரின் சம்மதத்திற்கு அனுப்ப வேண்டும். இதுதான் அனைத்து மருத்துவ கல்லுாரிகளிலும் பின்பற்றப்படும் நடைமுறையாகும்.
.
நோயாளியின் உடல் நலத்திற்கேற்ப அனைத்து சிறப்பு மருத்துவர்களும் பார்த்த பிறகு, மயக்கவியல் மருத்துவரிடம வரும் நோயாளியை, மயக்கவியல் மருத்துவரானவர் அறுவை சிகிச்சையின்போது அவருக்கு கொடுக்க இருக்கும் மயக்க மருந்து முறையயை தாங்கும் அளவில் நோயாளிக்கு ஏதாகிலும் குறை இருந்தால், அவரை மேலும் சில சிறப்பு மருத்துவர்களிடம் அவர்களது ஆலோசனைக்காக அனுப்புவார். உதாரணமாக மயக்கவியல் மருத்துவரானவர் நோயாளியின் இதயத்தில் சில பிரச்சனைகள் இருப்பதை கண்டறிந்தால், நோயாளியை இதய நோய் சிறப்பு சிகிச்சை நிபுணரிடம் அனுப்பி அவரது கருத்தை கேட்பார். எக்ஸ்ரேயில் நுரையீரலில் பாதிப்பு இருந்தால் காசா நோய் நிபுணரிடம் நோயாளியை அனுப்பி அவரின் கருத்து கேட்பார். அனைவரிடம் கருத்து கேட்ட பின், அந்த நோயாளியானவர் மயக்கவியல் மருத்துவம் கொடுக்கும் அளவிற்கு தகுதியானவரா என்று முடிவெடுப்பார்.
.
மருத்துவ கல்லுாரிகளில் அனைத்து சிறப்பு துறைகளும் இயங்கி வருகின்றது. குறிப்பாக இருதயம், சிறுநீரகம், நெஞ்சக ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு மருத்துவர்களின் கீழ் சிறப்பு துறைகள் இயங்கி வருகின்றது. ஆனால், இவ்வாறான துறைகள் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தாலுகா மருத்துவமனைகளிலோ இருப்பதில்லை. தமிழக அரசானது அடுக்கு முறை மருத்துவமனைகளை கொண்டு பொது மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவையை அளித்து வருகின்றது. எல்லா வசதிகளையும் கொண்டது சென்னையில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, அதற்கு அடுத்தாற்போல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், பின்னர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தாலுகாக மருத்துவமனை கடைசியாக குறைந்த வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்ற முறை பின் பற்றப்படுகின்றது. ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து அறுவை சிகிச்சையும் செய்ய முடியாது. அங்கு வரும் நோயாளியானவரானவர் மாவட்ட அரசு மருத்துவ மனைக்குதான் பரிந்துரை செய்யப்படுவார். இதய சம்பந்தமாக அறுவை சிகிச்சையானது மாவட்ட அரசு மருத்துவமனையில் செய்யமுடியாது அதற்காக நோயாளினவர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கோ அல்லது பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுவார்.
.
சில நேரங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் இதயத்தில் பிரச்சனை உள்ளவர்கள், குறிப்பாக அறுவை சிகிச்சை நேரத்தில் அந்த நோயின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ள நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவ கல்லுாரிக்கு மாறுதல் செய்யப்படுவார்கள் ஏனெனில் அறுவை சிகிச்சையின்போதோ அல்லது அறுவை சிகிச்சைக்கு பின்னரோ நோயாளிக்கு இதய சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டால், அதை சரிசெய்ய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இதய நோய் சிகிச்சை சிபுணர் அனைத்து நேரங்களிலும் இருப்பதில்லை. ஆகவே, நோயாளியானவர் உயர் சிகிச்சைக்கு அருகில் உள்ள மருத்து கல்லுாரிக்கு மாறுதல் செய்யப்படுவது என்பது அவரின் நலன் குறித்துதானே தவிர, தேவையற்ற வகையில் மாறுதல் செய்யப்படுவதில்லை. ஆகவே, நோயாளியானவர் அருகில் உள்ள மருத்துவ கல்லுாரிக்கு செல்ல மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும்போது, அது நோயாளின் நலனுக்கானது என்று நோயாளியின் உறவினர்கள் அதை ஏற்று கொள்ள வேண்டும். ஒரு நாளில் பலருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் மாவட்ட அரசு மருத்துவமகைளில், மருத்துவர்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட சிலரை மட்டுமே மருத்துவ கல்லுாரிக்கு செல்ல பரிந்துரை செய்கின்றார்கள் என்பதை உறவினர்கள் உணரவேண்டும்.
.
இப்போது அறுவை சிகிச்சைக்கான தாமத்திற்கு வருவோம். மேற்கூறிய முறையில், அதாவது நோயாளி அறுவை சிகிச்சை நிபுணரை சந்திக்கின்றார், அவர் அவரை பரிசோதிக்கின்றார், அவருக்கு பிரச்சனை இருந்தால், சிறப்பு மருத்துவர்களிடம் அனுப்பி வைக்கின்றார், சிறப்பு மருத்துவர் அவருக்கு உள்ள பிரச்சனையை சரி செய்ததும், திரும்பவும் அறுவை சிகிச்சை நிபுணரை சந்திக்கின்றார், அவர் அந்த நோயாளியை திரும்ப ஒரு முறை பரிசோதித்து அதன் பின்னர் மயக்கவியல் மருத்துவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கின்றார். இந்த அடுத்தடுத்த நடைமுறையில் எங்காவது தவறு நடக்குமானால் அந்த நோயாளி வீணாக அலைக்கழிப்பவடுவார்.
உதாரணமாக நோயளியின் உடல் நிலையை அறுவை சிகிச்சை நிபுணரால் முற்றிலுமாக / முறையாக பரிசோதிக்கப்படாமல் அவரை மயக்கவியல் மருத்துவரிடம் அனுப்பி வைப்பது வீண் தாமத்தை உருவாக்கும். பொதுவாக அறுவை சிகிச்சை நிபுணர்களானவர்கள் நோயாளியிடம், “ மயக்கவியல் மருத்துவர் ஓகே சொல்லிவிட்டால் அறுவை சிகிச்சை செய்துவிடலாம்“ என்று சொல்லிவிடுவார்கள். இப்போது நோயாளியை பரிசோதித்த மயக்கவியல் நிபுணரானவர் அவருக்கு இரத்த அழுத்தம் இருப்பதை கண்டறிந்தால், அவரை பொது மருத்துவரிடம் அனுப்பி வைப்பார். ஏற்கனவே நோயாளியின் மனதில் மயக்கவியல் மருத்துவர் அறுவை சிகிச்சைக்கு சரி என்று சொன்னால், உடனடியாக அறுவை சிகிச்சை நடந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருப்பவருக்கு, இப்போது புதிதாக அவரை பொது மருத்துவரிடம் மயக்கவியல் மருத்துவர் இரத்த அழுத்தத்திற்காக அனுப்பப்படும்போது, அவர் கோபம் எல்லாம் மயக்கவியல் மருத்துவர் மீது திரும்புகின்றது. ஏனெனில் மயக்கவியல் மருத்துவர் வீணாக அவரை பொது மருத்துவரிடம் அனுப்பி அலைக்கழிப்பதாக அவர் நினைத்து கொள்கின்றார்.
.
மேற்படி கூறிய அடுத்தடுத்த நடைமுறையில், அறுவை சிகிச்சை நிபுணரின் பணிதான் நோயாளின் உடல்நலத்தை பற்றிய அனைத்து முன் பரிசோதனைகளையும் செய்வதாகும். மேற்கூறிய உதாரணத்தில் அறுவை சிகிச்சை நிபுணர் நோயாளிக்கு இரத்த அழுத்தம் இருப்பதை கண்டு பிடித்திருந்தால்,அவரை பொது மருத்துவரிடம் நேரடியாக அனுப்பி வைத்திருக்க வேண்டுமே தவிர மயக்கவியல் மருத்துவரிடம் வந்து அதன்பின் பொது மருத்துவரிடம் அனுப்பத் தேவையில்லை. நோயாளியை பரிசோதிக்கும்போது, அவருக்கு ஆரம்பித்திலேயே உடல்நிலையில் பிரச்சனை இருப்பதை எடுத்து கூறினால் அவர் அமைதியாக இருப்பார். ஆனால் நோயாளியிடம் “மயக்கவியல் மருத்துவர் ஓகே சொன்னால், உங்களுக்கு உடனே ஆபரேஸன் செய்துவிடுவோம்“ என்று சொல்லி, அதன்பிறகு மயக்கவியல் மருத்துவர் அவரை சிறப்பு மருத்துவரிடம் அனுப்பி, அதன் பின்னர் சில வாரங்கள் கழித்து அவர் மயக்கவியல் மருத்துவரிடம் வரும்போது, நோயாளியானவர் மனதளவில் மருத்துவமனையின் நடைமுறைகளை பற்றி கோபப்பட ஆரம்பிக்கின்றார்.
.
பொதுவாக அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவர்களது அதிருப்தியை முதலில் காட்டுவது என்பது முன் பரிசோதனை செய்யும் மயக்கவியல் மருத்துவரிடம்தான் “என்ன சார், ஒரு மாசமாக அலைந்து கொண்டிருக்கின்றோம். இப்போ எனக்கு இரத்த அழுத்தம் இருக்கின்றது என்று நீங்கள் சொல்லுகின்றீர்கள். ஆனால் அறுவை சிகிச்சை நிபுணரும் இரத்த கொதிப்பிற்கு மெஷின் கட்டி பார்த்தார், ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை“ என்று கூறி பிரச்சனை பண்ணுவார்கள். ஆகவே, மேற்கூறிய அடுத்தடுத்த நடைமுறைகள் ஒழுங்காக அனைத்து மருத்துவர்களாலும் முறையாக பின்பற்றால் மட்டுமே, அறுவை சிகிச்சைகள் தாமதம் இல்லாமல் நடைபெறும்.

Friday, 27 July 2018

மருத்துவ காப்பீட்டில் உள்ள பிரச்சனைகள்

ரு பெண் மருத்துவ காப்பீடு 2 இலட்சத்திற்கு எடுத்துள்ளார். அவருக்கு கர்ப்பபை நீக்க அறுவை சிகிச்சைக்காக ஒரு சிறு மருத்துவமனையை அணுகியபோது, அதன் மருத்துவர் கர்ப்பபை நீக்க அறுவை சிகிச்சைக்காக ரூ.25 ஆயிரம் செலவாகும் என்று கூறினார். ஆனால் அந்த மருத்துவமனை சிறு மருத்துவமனை என்பதால், இன்சூரன்ஸ் கம்பெனியானது அந்த சிறு மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை செய்வதை அனுமதிப்பதில்லை. ஆகவே, பெரிய மருத்துவமனையில் வைத்து அந்த சிறு மருத்துவமனையின் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய தயாரக இருக்கும் நிலையில், அந்த பெரிய மருத்துவமனையானது அந்த நோயாளியிடம் “எங்கள் மருத்துவமனைக்கு இன்சூரன்ஸ் கம்பெனியானது கர்ப்பபை பை நீக்க அறுவை சிகிச்சைக்கு வெறும் ரூ.25 ஆயிரம் மட்டுமே வழங்கும் ஆக, எங்கள் மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் எங்கள் கட்டணம் பொதுவாக ரூ.50 ஆயிரம். ஆகவே, பாக்கி ரூ.25 ஆயிரத்தை எங்கள் மருத்துவமனைக்கு நோயாளி வழங்கினால் எங்கள் மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று கூறினார்கள்.
.
நோயாளி எடுத்திருக்கும் பாலிசியின் அடிப்படையில் அவருக்க ரூ.50 ஆயிரம் வரை கர்ப்பபை நீக்க அறுவை சிகிச்சைக்கு இன்சூரன்ஸ் கம்பெனி வழங்க வேண்டும். பின்னர் ஏன் அந்த மருத்துவமனைக்கு நோயாளி தனியாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கேள்விக்காக அந்த இன்சூரன்ஸ் கம்பெனியிடம் பேசினேன். அதற்கு இன்சூரன்ஸ் கம்பெனி கூறிய பதில் மிக ஆச்சிரியமாக இருந்ததது.
.
“ நோயாளி மருத்துவமனைக்கு பில்லை நேரடியாக செட்டில் பண்ணி அந்த பில்லை எங்களிடம் கொடுத்தால் நாங்கள் நோயாளிக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்துவிடுவோம். ஆனால், பணம் கட்டமால் Cashless முறையில் சிகிச்சை பெற முற்பட்டால் நாங்கள் அந்த மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் மட்டுமே வழங்குவோம் ஏனெனில் அந்த பெரிய மருத்துவமனையானது எங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியில் அவர்கள் மருத்துவமனையை சேர்க்க விண்ணப்பம் செய்யும்போது, கர்ப்பபை நீக்க அறுவை சிகிச்சையை ரூ.25 ஆயிரத்திற்கு பண்ணுவதாக ஒத்து கொண்டுள்ளதால், நாங்கள் ரூ.25 ஆயிரம் மட்டுமே வழங்குவோம். என்றார்கள்.
.
நான் அவர்களிடம் கேட்டேன் “ ஒரு மருத்துவமனை உங்களிடம் அவர்கள் பெயரை சேர்ப்பதற்காக கர்ப்பபை நீக்க அறுவை சிகிச்சை ரூ.5 ஆயிரத்திற்கு பண்ணுவோம் என்றால் கூட நீங்கள் அதற்கு ஒத்து கொள்வீர்களா? என்றதற்கு, பதில் இல்லை.
.
Cashless Mediclaim என்பதில் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் பெரிய மருத்துவமனைகளும் இணைந்து ஒரு காப்பீட்டாளருக்கு கொடுக்கும் தலைவலியை பாருங்கள். இன்சூரன்ஸ் கம்பெனியும் மருத்துவமனையும் தங்களுக்கு சாதகமாக ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்வார்களாம். அதற்கு மருத்துவ காப்பீடு பாலிசி வைத்திருக்கும் நுகர்வோர் கட்டுப்படவேண்டுமாம். இதற்கு ஒரே தீர்வு நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்கள்தான்.

பெண்களுக்கு செயற்கை கருத்தரிப்பு முறைகளில் தோல்வி ஏற்பட்டால், அது மருத்துவ சேவை குறைபாடு அல்ல.


Decided on 12.12.2017

பெண்களுக்கு செயற்கை கருத்தரிப்பு முறைகளில் தோல்வி ஏற்பட்டால், அது மருத்துவ சேவை குறைபாடு அல்ல.


NATIONAL CONSUMER DISPUTES
REDRESSAL COMMISSION, NEW DELHI

M. KOCHAR v.bISPITA SEAL & ANR.

First Appeal No. 368 of 2011 against Order dated 28.7.2011 in Complaint No. 240 of 2001 of Delhi State Consumer Disputes Redressal Commission The treating doctor adopted the standard method of IVF. The patient was properly investigated and given proper medicines for retrieval of eggs (ova) prior to IVF. Also SST was performed for her husband. In any given cycle, the chance of IVF success varies, depending on your age and your personal health circumstances. We do not find any deficiency or lapses in the duty of care on the part of OP “No cure/ no success is not a negligence”, thus fastening the liability upon the treating doctor is unjustified.